திருப்பூரில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் மக்கள் விரும்பத்தக்கதுடர் படம் பார்த்த லோகேஷ் கனகராஜ், விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மக்கள் விரும்பத்தக்கதுடர். பொங்கலை ஒட்டி ரிலீசான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.
துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில் என நடிகர் விஜய் நடித்த ஏழு படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள மக்கள் விரும்பத்தக்கதுடர் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
இந்நிலையில், மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தை திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில் நேரில் வந்து பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த படத்தில் இந்த விமர்சனங்கள் வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள முயற்சி செய்வேன். மக்களுக்கு இந்தப் படம் பிடித்திருப்பதால் தான் திரையரங்கிற்கு கூட்டமாக வருகின்றனர்.
விமர்சனம் என்பது பாசிட்டிவாகத் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை, நெகட்டிவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு பெரிய கதாநாயகனைக் காட்ட வேண்டும் என்பதாலேயே மக்கள் விரும்பத்தக்கதுடர் படம் நீளமாக உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.
[embedded content]
Source: Malai Malar