தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்காக படத்தின் கதையை படக்குழுவினர் மாற்றயிருக்கிறார்கள்.
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘லூசிபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.
இந்த படத்தின் தெலுங்கு மறுதயாரிப்பு உரிமையைக் கைப்பற்றினார் ராம் சரண். மோகன் ராஜா இயக்கவுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக நடித்த மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ‘தனி ஒருவன்’ மற்றும் ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களில் நயன்தாரா நடித்திருந்தார். நாயகி கதாபாத்திரத்தைப் படம் முழுக்க வருவது போன்று மாற்றியமைத்து நயன்தாராவுக்கு அதிக முக்கியத்துவம் வருமாறு கதையை மாற்றியுள்ளனர்.
[embedded content]
Source: Malai Malar