ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படத்தின் ரகசியத்தை நடிகை கசியவிட்டதால் படக்குழு அதிர்ச்சியடைந்தனர்.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம்(ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட வரவு செலவுத் திட்டத்தில் உருவாகி வருகிறது.
மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐரிஷ் நடிகையான அலிசான் டூடி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வருகிற 2021-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி ரிலீசாக உள்ளதாக பதிவிட்டிருந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் அந்த பதிவை நீக்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து அவர் உடனே நீக்கி விட்டார். இருப்பினும் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்த ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டு்கி வருகின்றனர்.
[embedded content]
Source: Malai Malar