Press "Enter" to skip to content

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. தலைவராக டி.ராஜேந்தர், பொதுச்செயலாளர்களாக சுபாஷ் சந்திரபோஸ், ஜே.சதீஷ் குமார், துணை தலைவர்களாக சிங்காரவடிவேலன், பிடி.செல்வகுமார், பொருளாளராக கே.ராஜன் பொறுப்பேற்றனர். 

வினியோகஸ்தர் சங்கத்தில் டி.ராஜேந்தர் தலைவராக இருப்பதால் இந்த சங்கத்தில் தலைவர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ராஜினாமா செய்தார். இந்நிலையில்  தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தரும் கவுரவ ஆலோசகராக டி.ராஜேந்தரும் சங்க உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »