நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில், கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜெயம் ரவி அடுத்ததாக பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், அப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அதில் வட சென்னையை சேர்ந்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். பூலோகம் படத்தில் பாக்ஸராக நடித்திருந்த ஜெயம் ரவி, இப்படத்தில் கேங்ஸ்டராக நடிக்க உள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
[embedded content]
Source: Malai Malar