Press "Enter" to skip to content

பிரபுதேவா படத்தில் ரூ.85 லட்சம் நஷ்டம்… சிங்கிள்ஸ் பட விழாவில் டபுள்ஸ் பற்றி பேசிய கே.ராஜன்

பிரபுதேவா படத்தில் ரூ.85 லட்சம் நஷ்டம் அடைந்தேன் என்று சிங்கிள்ஸ் பட விழாவில் டபுள்ஸ் பற்றி தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளார்.

அட்டக்கத்தி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நானும் சிங்கிள் தான்’. இப்படத்தில் கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோபி என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘நானும் சிங்கிள் தான் படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். நான் டபுள்ஸ் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தேன். இதில் பிரபுதேவா, மீனா, சங்கீதா ஆகியோர் நடித்திருந்தார்கள். கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனையை படமாக உருவாக்கப்பட்டது.

இந்த படத்தில் எனக்கு ரூ.85 லட்சம் நஷ்டம் அடைந்தேன். எப்போதும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு தர வேண்டும். ஒரு இயக்குனரைத்தான் தயாரிப்பாளர் நம்பி பணம் போடுகிறார். அதை மனதில் வைத்து இயக்குனர்கள் படம் எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »