Press "Enter" to skip to content

ரசிகர்களுக்காக கணவருடன் இருக்கும் காணொளியை வெளியிட்ட சாந்தினி

தமிழில் சித்து பிளஸ் 2 படத்தில் நடிகையாக அறிமுகமான சாந்தினி, ரசிகர்களுக்காக கணவருடன் இருக்கும் காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சித்து பிளஸ் 2’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. தொடர்ந்து பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் இரட்டை ரோஜா, தாழம்பூ ஆகிய தொடர்களிலும் நடித்தார்.

சாந்தினிக்கும் நடன இயக்குநர் நந்தாவுக்கும் இருவீட்டார் சம்மதப்படி கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சாந்தினி எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் பொம்மை படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைத்துறை பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். நடிகைகள் பலரும் அவ்வப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவது, படம் குறித்த அறிவிப்புகளை பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என இன்ஸ்டாகிராமில் வேலையாக இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை சாந்தினி தனது கணவருடன் எடுத்த ரீல் காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எல்லோரும் கேட்டுக் கொண்டதற்காக தன்னுடைய கணவருடன் எடுத்த முதல் ரீல் காணொளியை பதிவிடுவதாகவும் அவர் எழுதியுள்ளார். சாந்தினியின் இந்த பதிவைப் பார்த்த பலரும் அற்புதமான ஜோடி என்று பாராட்டி வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »