Press "Enter" to skip to content

டப்பிங் முடிந்தது…. விரைவில் ‘கர்ணன்’ குரலை கேட்பீர்கள் – தனுஷ் டுவிட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷின் 41-வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டுள்ளனர். தாணு தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

கர்ணன் படத்திற்காக தனுஷ் டப்பிங் செய்த புகைப்படத்தை படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது. இந்நிலையில், கர்ணன் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக நடிகர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். விரைவில் கர்ணன் குரலை கேட்பீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »