Press "Enter" to skip to content

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தேதி அறிவிப்பு

பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

காதலர் தினமான இன்று பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ‘ராதே ஷ்யாம்’ படக்குழு, அத்திரைப்படத்தின் வெளியீடு தேதியை அறிவித்துள்ளதோடு, படத்திலிருந்து ஒரு காதல் காட்சியையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி ‘ராதே ஷ்யாம்’ படம் வருகிற ஜூலை 30 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபாஸ், காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, ராதா கிருஷ்ண குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிக்கின்றனர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள காட்சியானது ரோமில் படமாக்கப்பட்டுள்ளது. தொடர் வண்டிஒன்றில் தொடங்கும் காணொலி, காடுகளை நோக்கி பயணிக்கிறது. இத்தாலி மொழியில் ‘செய் உன் அங்கெலோ? தேவோ மோரிர் பெர் இன்காண்ட்ரர்டி?’என்று காதல் பொங்க பூஜாவிடம் பிரபாஸ் உரையாடுகிறார். இதன் பொருள் என்னவாக இருக்கும் என்று பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.

இக்காணொலி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், காதலர் தினத்திற்கான சரியான பரிசாக இது அமைந்துள்ளது என அவர்கள் கூறி வருகின்றனர். இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய காதல் படமாக ‘ராதே ஷ்யாம்’ இருக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சிறப்பு காட்சி வெளியாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »