பவன் கல்யாணுக்கு 4-வது மனைவியாக ஆயத்தம் என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கூறியது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம்வருபவர் பவன் கல்யாண். டோலிவுட்டில் பவர் ஸ்டாராக இருக்கும் இவர், கடந்த 1997-ம் ஆண்டு நந்தினி என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக 2007-ல் அவரை விவாகரத்து செய்தார்.
இதையடுத்து 2009-ம் ஆண்டு ‘ஜானி’ படத்தில் நடித்த ரேணு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பவன் கல்யாண், 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். பின்னர் 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலிய நடிகையான அன்னா லெஸ்னேவாவை 3-வது திருமணம் செய்துகொண்ட பவன் கல்யாண், தற்போது அவருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகையும், பிக்பாஸ் பிரபலமும் ஆன அஷூ ரெட்டி, பவன் கல்யாணுக்கு 4-வது மனைவியாக ஆயத்தம் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பவன் கல்யாணின் தீவிர ரசிகையான இவர் சமீபத்தில் அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ‘எப்பொழுதுமே என் முதல் காதல் நீங்கள் தான் பவன் கல்யாண்’ என குறிப்பிட்டிருந்தார்.
அஷு ரெட்டியின் இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள், பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டு அவருக்கு 4-வது மனைவியாக நீங்கள் தயாரா என்று கேட்டனர். அதற்கு அஷு ரெட்டியோ கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென, நான் ஆயத்தம் என்று பதில் அளித்தார்.
[embedded content]
Source: Malai Malar