2017 ஆம் ஆண்டு வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்த அருவி திரைப்படம் இந்தியில் மறுதயாரிப்பு ஆவதை உறுதி செய்திருக்கிறார்கள்.
அதிதி பாலன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அருவி’. அருண் பிரபு இயக்கிய இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் இந்தியாவிலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் பெரும் விமர்சனங்களை பெற்றது.
அருவி படம் இந்தியிலும் மறுதயாரிப்பு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்கல் புகழ் இளம் மற்றும் திறமையான நடிகை, பாத்திமா சனா ஷேக் அதிகாரப்பூர்வ இந்தி மறுதயாரிப்புகில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இ.நிவாஸ் இப்படத்தை இயக்குகிறார்.
நடிகை பாத்திமா தனது புதிய குழுவுடன் பாவனை கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை அறிந்து மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்.
[embedded content]
Source: Malai Malar