Press "Enter" to skip to content

குழந்தைக்கு நல்ல பெயரை தேர்ந்தெடுக்க ரசிகர்களுக்கு ஸ்ரேயா கோஷல் வேண்டுகோள்

விரைவில் தாயாக இருக்கும் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், குழந்தைக்கு நல்ல பெயரை தேர்ந்தெடுக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம வேலையாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நாங்கள் குழந்தையின் பெயர்களைப் பற்றி இதுவரை சிந்திக்கவில்லை. நாங்கள் பல விருப்பங்களை பரிசீலித்து வருகிறோம், குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பரிந்துரைகளை கேட்கிறோம், என்று அவர் கூறினார், மேலும், “நான் இப்போது அதை என் ரசிகர்களிடமும் கேட்க நினைக்கிறேன். அவர்கள் நிச்சயமாக மிகவும் அர்த்தமுள்ள மற்றும் தனித்துவமான பெயர்களைக் கொண்டு வருவார்கள் என்று கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »