Press "Enter" to skip to content

‘கர்ணன்’ படம் பார்த்த பின் ரஜினிகாந்த் என்ன சொன்னார்? – தயாரிப்பாளர் தாணு விளக்கம்

தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கர்ணன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் தனுஷின் மாமனாரும், நடிகருமான ரஜினிகாந்த், கர்ணன் படத்தை வெளியீட்டிற்கு முன்பே பார்த்து பாராட்டியதாக தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், ரிலீசான பின்னர் படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம். அவ்வாறு இருக்கையில், கர்ணன் வெளியீட்டிற்கு முன்பே அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் செல்ல வேண்டி இருந்ததால், கர்ணன் படத்தை வெளியீட்டிற்கு முன்னரே பார்க்குமாறு தாணு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ரஜினிகாந்த் படத்தை பார்த்தாராம். படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், படத்தை பார்த்த பின் படக்குழுவினரை அவர் பாராட்டியதாகவும் தாணு தெரிவித்துள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »