Press "Enter" to skip to content

கொரோனா பாதிப்பால் நடிகர் ஜோக்கர் துளசி மரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு என சிலர் இறந்தும் போய் உள்ளனர். 

அந்த வகையில், தற்போது நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மருதுபாண்டி, உடன்பிறப்பு, தமிழச்சி, இளைஞரணி, அவதார புருஷன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரையிலும் கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »