தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் தான் நடனமாடும்போது கர்ப்பமாக இருந்ததாக பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
‘உன்னை தேடி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன் பிறகு, ‘ஆனந்த பூங்காற்றே’, ‘ரோஜா வனம்’, ‘வெற்றி கொடி கட்டு’, ‘பேரழகன்’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ மற்றும் ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில் “வாழ மீனுக்கு” என்ற ஒரே ஒரு பாடலில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷ் மேனனை 2007-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில், தனது தமிழ் திரைப்படம் அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது விஜய்யுடன் குருவி படத்தில் ‘டண்டானா டர்னா’ பாடலில் நடனம் ஆடிய தருணத்தைப் பகிர்ந்துக் கொண்டார். விஜய்யுடன் நடனம் ஆட கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் அப்போது நான் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததால், நன்றாக நடனம் ஆட முடியாமல் போனதில் வருத்தமுண்டு. அந்த பாடலில் எளிதாக உடலை அசைப்பது போன்ற ஸ்டெப் தான் இருக்கும். அது எனது கடைசிப் படமும் கூட. ஒரு வேளை கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால், மனதில் பதியும்படி, சிறந்த நடனத்தை கொடுத்திருப்பேன் என்றார் மாளவிகா.
[embedded content]
Source: Malai Malar