லாக்டவுன் சமயத்தில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக தெரிவித்துள்ள சுருதிஹாசன், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாஸின் சலார் படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இவர் காதல் வலையில் சிக்கியதும், அதிலிருந்து காதல் முறிவு ஏற்பட்டு சில காலம் திரைப்படத்தில்ிருந்து விலகி இருந்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது அவர், சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார்.
இந்த லாக்டவுன் சமயத்தில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்களையும் பகிர்ந்து, “லாக்டவுனில் என்னுடைய சிறந்தவருடன் இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். சுருதிஹாசனின் இந்தப் பதிவுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.
[embedded content]
Source: Malai Malar