Press "Enter" to skip to content

கவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மனைவியின் உடலுக்கு, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கவச உடை அணிந்தபடி வந்து அஞ்சலி செலுத்தினார்.

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் மறுதயாரிப்பு ஆனது. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆர்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் மறுதயாரிப்பை இயக்குகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று இரவு அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மனைவியின் உடலுக்கு, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கவச உடை அணிந்தபடி வந்து அஞ்சலி செலுத்தினார். அவர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதை பார்த்து அருகில் இருந்தவர்கள் மனமுடைந்து போயினர். இதேபோல் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலினும், சிவகார்த்திகேயனும் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »