Press "Enter" to skip to content

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மகிழ்ச்சியடைய வைத்த விஜய் சேதுபதி

கமலைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை சந்தித்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

புற்று நோயால் பாதித்த ஒருவரை ஜூம் கால் மூலம் நடிகர் கமல் நேற்று உரையாடினார். இந்த உரையாடல் மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. கமலை தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய் சேதுபதி புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார்.

தன்னை நேரில் பார்க்க வேண்டும் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் விருப்பப்படுவதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, அந்த சிறுவனை குடும்பத்தினரோடு தனது வீட்டிற்கு அழைத்து கட்டி அணைத்து தனது பாணியில் முத்தம் கொடுத்து அந்த சிறுவனுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »