Press "Enter" to skip to content

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அல்லு அர்ஜுன்

பிரபல நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்கள் புகைப்பிடிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் தற்போது புஷ்பா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்கள் புகைப்பிடிக்க கூடாது என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதைப்பற்றி அல்லு அர்ஜுன் கூறும்போது, “புகை பிடிப்பதின் தீமைகளை குறித்து கவனத்தை ஈர்க்க விரும்பினேன். 90களின் காலகட்டத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தால் நாம் ஈர்க்கப்பட்டபோது தான் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகமானது. அந்த காலத்தில் அது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது.

தற்பொழுது 2021-ல் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு மத்தியிலும் புகைப்பிடிக்கும் பழக்கம் உச்சத்தில் உள்ளது. இதற்கு மனஅழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதை மாற்ற என்னால முடிந்த ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதாலும், மேலும் மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாக கூறப்படுவதாலும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்பினேன். எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை குறித்து நான் எடுத்துரைத்து வருகிறேன். சிறிய அளவில் நாம் செய்யும் மாற்றம் கூட நம்மை சீரான மற்றும் ஆரோக்கியமான பாதைக்கு அழைத்து செல்லும் நான் நம்புகிறேன்” என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »