மோகன்லாலின் தீவிர ரசிகையான ருக்மிணி, அழுதபடி பேசிய காணொளி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மோகன்லால். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், நடிகர் மோகன்லால் தனது ரசிகை ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கேரளாவின் புன்குன்னம் என்கிற பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருப்பவர் ருக்மிணி(வயது 80). மோகன்லாலின் தீவிர ரசிகையான இவர், அழுதபடி பேசிய காணொளி சமீபத்தில் மிகுதியாக பகிரப்பட்டது. அதில், மோகன்லால் பெயரை வைத்து தன்னைப் பலரும் கிண்டல் செய்வதாகவும், அவரை சந்திக்க முடியவில்லை என்பது குறித்தும் அவர் பேசி இருந்தார்.
ருக்மிணியுடன் நடிகர் மோகன்லால் காணொளி காலில் பேசியபோது எடுத்த புகைப்படம்
இதுகுறித்து அறிந்த நடிகர் மோகன்லால், ருக்மிணியை காணொளி காலில் அழைத்துப் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது உங்களை சந்திக்க வேண்டும் என ஆசையுடன் கேட்ட ருக்மிணியிடம், கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு, நேரில் வந்து சந்திப்பதாக நடிகர் மோகன்லால் உறுதி அளித்துள்ளார்.
[embedded content]
Source: Malai Malar