சிறையில் இருந்து விடுதலை ஆனதும் ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவேன் என ஆர்யன் கான் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்துகொண்டதன் காரணமாக கடந்த மாதம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும், தொண்டு நிறுவனத்தினரும் கவுன்சிலிங் அளித்ததாக கூறப்படுகிறது.
அவர்களிடம் ‘சிறையிலிருந்து விடுதலையான பிறகு, நீங்கள் பெருமைப்படும் படியான நல்ல பணிகளை செய்வேன்’ என்று ஆர்யன் கான் உறுதி அளித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யன் கான்
மேலும் ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவேன் என்றும் தீய வழிகளில் இனி செல்ல மாட்டேன் எனவும் கவுன்சிலிங்கின் போது ஆர்யன் கான் தெரிவித்தாராம். ஆர்யன் கானுக்கு ஏற்கனவே பிணை மறுக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அவரது பிணை மனு மீது விசாரணை நடக்க உள்ளது.
[embedded content]
Source: Malai Malar