சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கும் விழா டெல்லியில், வரும் 25ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டு தோறும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் வழங்கும். இந்த வருடம் தேசிய திரைப்பட விழா வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விருது விழாவில், நடிகர் ரஜினிக்கு இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய கெளரவமான தாதா சாகேப் பால்கே விருது வழங்க இருக்கிறார்கள்.
தமிழ்த் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இதற்காக 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
[embedded content]
Source: Malai Malar