Press "Enter" to skip to content

இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம் – கமல்ஹாசன் பதிவு

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், பேரறிவாளனின் விடுதலை குறித்து பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பேரறிவாளன் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் என பலரும் வரவேற்று பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன்

இந்நிலையில் இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், “ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »