Press "Enter" to skip to content

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உயர்வு – முதலமைச்சர் பெருமிதம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்கூடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல்  கவிஞர் மாளிகை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இது முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆற்றிய உரைகள் பின்வருமாறு…..

ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும்

இந்த கூட்டத்தில் தலைமை உரையாற்றிய முதலமைச்சர் மு க ஸ்டாலின்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை தரம் உயர தனி அக்கறை செலுத்தி திட்டம் தீட்டி வருகின்றோம். ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தேர்வு உதவித்தொகை குறைந்தபட்சம் 85 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும் அதிகபட்சமாக 8.25 லட்ச ரூபாயிலிருந்து 12 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த நிதி ஆண்டில் 3870 நபர்களுக்கு 47 கோடி ரூபாய் தீர்வு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 732 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் கல்வி உதவித்தொகை வீட்டு மனை பட்டா ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்டோரே சமூக கண்ணோட்டத்தில் அணுகி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிகள் அண்ணா பணியாளர்கள் நிர்வாக கல்லூரிகள் மூலம் வழங்கப்பட உள்ளன..

 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் விரைந்து முடிக்க 22 நீதிமன்றங்கள் உள்ளன சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக நான்கு  புதிய தனியோரு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, 
முதல் கட்டமாக சேலத்தில் புதிய தனிஒரு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது..
 
சாதி வேறுபாடற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டுள்ள   முன்மாதிரி சிற்றூர்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தலா 10 லட்சம் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளத, கடந்த நிதியாண்டில் மட்டும் 70 சிற்றூர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர்..

தீண்டாமை கடைபிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடும் பொருட்டு 10 லட்சம் ரூபாய் நதி வழங்கப்பட்டு வருகிறது.திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 37 கிராமங்கள் பயன் பெற்றுள்ளது..

பொதுமக்களிடையே  தீண்டாமை எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மனித நேய வார விழா நடத்தப்படுகிறது…
ஆதிதிராவிடம் மக்களின் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக 2,206கோடியே 70 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…

பழங்குடியினர் உண்டி உறைவிடம் பள்ளிகளின் பராமரிப்பு மற்றும்  அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த நிதியாண்டில் 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது… 

கடந்த நிதியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் 366 விடுதிகளை பழுது பார்க்க 25கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது.திருத்தி அமைக்கப்பட்ட முனைவர் பட்டப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ்  இதுவரை 2,954 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது..

வெளிநாட்டுக்கு சென்ற உயர் கல்வி பயில மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு  8 லட்ச ரூபாய் உயர்த்தப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் 18 மாணவர்களுக்கு  3 கோடியை 66 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க| ஆளுநர் தமிழக அரசுக்கு போட்டி அரசியல்வாதியாக செயல்படுகிறார் – கே.பாலகிருஷ்ணன்

பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள்

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதாரம் மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன் அடைவதற்கான வருமானம் உச்சவரம்பு 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த நிதி ஆண்டில் தாட்கோவால் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் மூலம் 20 ஆயிரத்து 544 நபர்கள்  மற்றும் 296 சுய உதவிக் குழுக்கள் பயன் பெற்றுள்ளது.இந்த நிதி ஆண்டில் 68,225 நபர்கள் பயனடையும் வகையில் 285கோடியே 2 லட்சம் ரூபாய் அளவிலான செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அரியலூர் மாவட்டத்தில் வாழும் 16 கிராமங்களில் வாழும் இருளர் மக்களுக்கு 967 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி சேகரம் செய்வதற்கு  சிறப்பிடமாக 86 லட்சத்து13ஆயிரம் வழங்கப்பட்டு 500 குடும்பங்களை சார்ந்த கூலி தொழிலாளியாக இருந்த 2000 நபர்கள் தொழில் முனைவராக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்..

 ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வாழும்  பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உன்னி குச்சி மூலம் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் தளவாட பொருட்கள் உற்பத்திக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டம் 100 கோடி ரூபாய் செலவில்

இந்த நிதியாண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் என்னும் புதிய திட்டம் 100 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்…
நகர்புற பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிட குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து முழுமையான சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி அயோத்திதாசர் பண்டிதர் இருப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், இந்த திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. பழங்குடியின கிராமங்களுக்கு இணைப்பு சாலைகள் தெரு விளக்குகள், சோலார் விளக்குகள், மற்றும் குடிநீர் வசதிகள் வணக்கம் சிறப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | என்னை சிறையில் அடைக்கலாம்; ஒருபோதும் முடக்க முடியாது – ராகுல்காந்தி பேச்சு!

வீடற்ற இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்கு 4324 வீடுகள் 423கோடி ரூபாய் செலவில் கட்டபட்டு வருகிறது, பழங்குடியினர் வாழ்க்கைத்தரத்தை  மேம்படுத்தும் வகையில் விரிவானம் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 94 கோடியே 94 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்பு வன உரிமைகள் அங்கீகரிக்கும் சட்டத்தின் கீழ் இதுவரை  10,410 தனிநபர் உரிமைகளும் 528 உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

3 கூர்நோக்கு  குழுக்கள் அமைக்கப்படும்

மாநில அளவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சட்டபூர்வ உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்கவும் தமிழ்நாடு மாநில பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிங்களுக்கான ஆணையம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. பழங்குடியினர்களுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ் உண்மை தன்மையை ஆய்வு செய்து இறுதி ஆணை பிறப்பிக்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையர் தலைமை செயலர் மற்றும் கூடுதல் செயலர் தலைமையில் மாநில அளவில் 3 கூர்நோக்கு  குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது..

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியிருக்கான துறைதிட்டம் செவ்வனே செயல்படுத்துவதை உறுதிசெய்திட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது உரிய ஆலோசனைக்கு பிறகு அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்ட படிவு அறிமுகப்படுத்தப்படும்… 

பல்லாயிரம் ஆண்டுகள் அழுக்கை சில பத்து ஆண்டுகளில் சரி செய்து விட முடியாது என்பது உண்மைதான் அதே நேரத்தில் சமூக வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி உருவாக்கும் நமது  விழிப்புணர்வு பயணம் தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »