Press "Enter" to skip to content

முதல் வெற்றி என்றாலும்… த்ரில் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்!

ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு நாளையொட்டி சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னை அடையாறில் உள்ள காந்திநகர் கிளப்பில் கடந்த 2 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. எட்டு நாட்கள் பகல் ஆட்டமாக போட்டிகள் நடைபெற்ற இந்த தொடரில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், உக்ரைன், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்றனர். 

ஒற்றையர் பிரிவு:

ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற  இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் திக்விஜய் பிரதாப் சிங், சகநாட்டு வீரரான சித்தார்த் ராவத்தை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3 என்ற புள்ளிகளில் சித்தார்த்தை வீழ்த்தி திக் விஜய் பிரதாப் சிங் பட்டத்தை கைப்பற்றினார்.

இதையடுத்து முதலிடம் பிடித்த ஹரியானாவை சேர்ந்த திக் விஜய் பிரதாப் சிங்க்கு ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 120 ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த சித்தார்த் ராவதுக்கு  ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 304 ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. 

 

இரட்டையர் பிரிவு:

இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்த இணைக்கு  76 ஆயிரத்து 260 ரூபாயும் இரண்டாம் இடம் பிடித்த இணைக்கு 44 ஆயிரத்து 240 ரூபாயும் வழங்கப்பட்டது.

பரிசுகளும் வாழ்த்தும்:

மாலை முரசு குழும நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தன் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் துணை தலைவர் விஜய் ஷங்கர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகையை  வழங்கி வாழ்த்து  தெரிவித்தனர். மேலும் காந்திநகர் கிளப் செயலாளர் மகேஷ் ஹான்பாக், உறுப்பினர்கள்  நாராயணன் உள்ளிட்ட பரிசு வழங்கும் நிகழச்சியில் கலந்து கொண்டு வீரர்களுக்கு  வாழ்த்து  தெரிவித்தனர்.

இதையும் படிக்க:    “கர்ணன்” திரைப்படக்கூட்டணியின் அடுத்த பிரமாண்ட படைப்பு…!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »