Press "Enter" to skip to content

கல்லா பெட்டியை உடைத்து திருட்டு…அசோக் நகர் ஹாட்சிப்ஸ் கடையில்!!

சாலையில் முந்தி செல்வதில் மருத்துவரின் தேரை உரசிய அரசு பேருந்து தட்டிக்கேட்ட மருத்துவரை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.  சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து காரில் உரசியதால் அதனை தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய சமத்துவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உரசிய பேருந்து:

கோடம்பாக்கம் யூனிடெட் காலனியை சேர்ந்தவர் மருத்துவர் சிவானந்தகுமார்.   ONGC-ல் காண்ட்ராக்டில் நான்கு வருடமாக மருத்துவராக பணிபுரிந்து வந்து அவர் தற்போது VRS பெற்று அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.  இன்று மதியம் அவரது காரில் மனைவி மற்றும் மகளுடன் ஆற்காடு ரோட்டில் இருந்து மருத்துவர் அம்பேத்கர் சாலை வழியாக செல்வதற்கு பவர் ஹவுஸ் அருகே தேரை ஓட்டி வரும்போது காருக்கு இடது பக்கமாக வந்த தடம் எண்  17 D என்ற பாரிமுனையில் இருந்து  கே கே நகர் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் காரின் இடது  பின்பக்க டயர் மற்றும் காரின் பக்கவாட்டில் லேசாக உரசியவாறு சென்றதால், மருத்துவர் ஓட்டுனரிடம் ஒழுங்காக  பேருந்தை ஓட்டிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 

விடாமல் பின்தொடர்ந்து:

இதனால் கோபமடைந்த பேருந்து ஓட்டுநர் அவரை விடாமல் பின் தொடர்ந்து சென்று தேரை அணைத்தவாறு நிறுத்தி மருத்துவரை  கீழே  இறங்கி வரச் சொல்லி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்  இருவரும் தகராறு செய்துள்ளனர்.  இதனோடு நில்லாமல் அவரை தாக்கியும் உள்ளபர்.  இதை மருத்துவரின்  மனைவி செல்போனில் படம் பிடித்துள்ளார். அதனையும்  பிடுங்க முயற்சி செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி,மருத்துவரை கீழே தள்ளி விட்டதில் இடது காதில் ரத்த காயமும் , வலதுகால் முட்டி ,இடது கை முட்டியில் காயமும் ஏற்பட்டுள்ளது.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு கீழ்பாக்கம் மருத்துவமனை கொண்டு சென்று புறநோயாளிகள் சிகிக்சை பிரிவில் சேர்த்துள்ளனர். 

புகார்:

சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் அவரை  தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க:  நவீன கால நாட்டாமைகள்…! நடவடிக்கை எடுக்குமா அரசு…? 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »