Press "Enter" to skip to content

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு…! தென்காசியில் சமத்துவ நாள் உறுதிமொழி…!

பீகாரில் தனது வீட்டை விற்று பொதுமக்களுக்கு ஒருவர் தலைக்கவசம்டுகளை இலவசமாக வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

‘தலை கவசம் உயிர் கவசம்’ என்பதை மறந்து எல்லோரும் வாகனத்தில் பயணம் செய்யும் போது தலைக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர்.  ஹெட்மெட் அணிவதன் முக்கியதுவத்தை அறிந்தும், அதனால் ஏற்படும் விபரீதங்களை அறிந்தும் பலர் தலைகவசத்தை அணியாமல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல விபத்துகளில் பயணிகள் தங்கள் உயிரையும் இழந்து வருகின்றனர். 

இந்த உயிர் இழப்புகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, ஹெல்வேட் அணியாமல் பயணம் செய்தால்  அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும், இன்னும் சிலர் தலைகவசம் அணியாமல் தான் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க : சிவகங்கையில் வினோத வழிபாடு…200 ஆண்டுகளாக மாறாத அதே பாரம்பரியம்…!

இந்நிலையில் பீகாரில் ஒருவர் தலைகவசத்தின் முக்கிய துவத்தை எடுத்துரைக்கும் வகையில், 56 ஆயிரம் தலைக்கவசம்களை இலவசமாக வழங்கியுள்ளது இணையத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

 

பீகாரை சேர்ந்த ராகவேந்திர குமார் என்பவர், தனது வீட்டை விற்று இதுவரை 56 ஆயிரம் தலைக்கவசம்களை இலவசமாக வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தனது நெருங்கிய நண்பன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் தலைக்கவசம் அணியாமல் சென்று சாலை விபத்தில் உயிரிழந்ததால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைக்கவசம்டுகளை இலவசமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, செலவை சமாளிக்கும் வகையில் தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஒருவர் தனது வீட்டை விற்று பொதுமக்களுக்கு தலைக்கவசம்டுகளை இலவசமாக வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »