இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீதான பாலியல் புகாரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குத்துச்சண்டை வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் புகார்:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், உத்தரப்பிரதேச எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி துாக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் போராட்டம்:
அதனை தொடர்ந்து பாலியல் தொடர்பாக விசாரிக்க கடந்த ஜனவரி 23 ஆம் தேதி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டார். இந்நிலையில் குழு அமைத்தும் பிர்ஜ் பூஷன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அறிவிப்பு:
மேலும் இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையம் சார்பில் எழுத்துப்பூர்வமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என மாநில மகளிர் ஆணையம், டெல்லி காவல்துறையினருக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளது.
இதையும் படிக்க: 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் குடமுழுக்கு….!!!
Source: Malai Malar