Press "Enter" to skip to content

மணல் ராமச்சந்திரன் அருகில் நின்று பாவனை கொடுத்த ஸ்டாலின்…!! அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

மணல் மாபியா என்ற அடைமொழியில் வளம் வருபவரும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவருமான மணல் ராமச்சந்திரனுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டோவுக்கு போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் தங்கம் பதுக்கிவைத்ததாக கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டரும் தொழிலதிபருமான சேகர் ரெட்டி, மற்றும் அவரது உறவினர் சீனிவாசரெட்டி, கூட்டாளி பிரேம் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி அதில் 131 கோடி ரூபாய் பணம், 171 கிலோ தங்கம் மற்றும் சொத்துகள் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. பின்னர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து  அவரது ஆதரவாளர்களான தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம் , மற்றும் அவரது உறவினர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ராமச்சந்திரன்  என்கின்ற மணல் ராமச்சந்திரன் ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமச்சந்திரனுக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசியல் புள்ளிகளும் தொழிலதிபர்கள் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். இதனையடுத்து அந்த வழக்கு அமலாக்கத்துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் சிபிஐ அதிகாரிகளும் புதுக்கோட்டையில் உள்ள ராமச்சந்திரனுக்கு  சொந்தமான மணல் குவாரி, மற்றும் அவரது அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ராமச்சந்திரனை கைது செய்தனர். வில்லங்க பேர்வழி என பெயர் எடுத்த மணல் ராமச்சந்திரன் விஐபி வீட்டு திருமணங்களில் முகம் காட்டுவது வழக்கமாக கொண்டுள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் வள்ளதிரகொட்டை அடுத்த முத்துப்பட்டினத்தை சொந்த  ஊராகக் கொண்ட இவர் ,   ஆரம்ப காலத்தில் ரைஸ்மில்  அதிபராக இருந்து  பிறகு உறவினர் ரத்தினத்துடன் இணைந்து  ஒயின்ஷாப் கைகளை  எடுத்து நடத்தி பின்னர் மணல் வியாபாரத்தில்  கால்பதித்தவர் ஆவார். 

அப்போது  மணல் பிசினஸில்  கோலோச்சிய படிக்காசு, மற்றும் ஆறுமுகசாமி, ஆகியோருடன் தொடர்பு வைத்துக் கொண்ட இவர், மணல் குவாரிகளில் சப்-டீலராக இணைந்து குவாரிகளை நடத்தி வந்தார். அதிமுக திமுக என எந்த அரசியல் புள்ளிகளின் இல்லத் திருமணமாக இருந்தாலும் அங்கு முக்கிய விஐபி வரிசையில் கௌரவப்படுத்த கூடியவராக இருக்கிறார் இந்த மணல் ராமச்சந்திரன். இந்நிலையில், தஞ்சையில் இன்று முன்னாள் மத்திய இணை அமைச்சரும் திமுக நாடாளுமன்ற எம்பியுமான எஸ். பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்ததுடன் மணமக்களை வாழ்த்திப் பேசினார் நிகழ்ச்சிகள் அதிமுக,  திமுக ,  காங்கிரஸ் , அமமுக , என அரசியல் பாகுபாடின்றி முக்கிய அரசியல் புள்ளிகள் கலந்துகொண்டனர்.

 

திமுக தலைவர் ஸ்டாலின் , தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி , சசிகலாவின் சகோதரர் திவாகரன்,  ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதில் மணல் ராமச்சந்திரனும் கலந்து கொண்டார் .  அப்போது மேடையில் அனைவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்  அப்போது மணல் ராமச்சந்திரன் மேடையில் கெத்தாக  நிற்க , அவருக்கு பின்னால் திமுக தலைவர் முக ஸ்டாலின்  பவ்யமாக நிற்பதைப் போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது .   இந்த புகைப்படத்தை பார்க்கும் திமுகவினர் ஒரு மாபெரும் கட்சியினுடைய தலைவர் இப்படியா நிற்பது, தராதாரம் பார்த்து நிற்க வேண்டாமா இப்படியே போனா திமுக நல்லா விளங்கிடும் என்று பொறுமி வருகின்றனர்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »