மதுரை: கொரோனா வைரஸ் பாதித்த சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக இந்தியா அழைத்துவர உத்தரவிடக்கோரி சமயசெல்வன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிப்.18க்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.
Source: Dinakaran