Press "Enter" to skip to content

CM கனவில் ஸ்டாலின்… தி.மு.க.,வுக்கு திருப்பம் தருமா திருச்சி மாநாடு..?

சென்டிமெண்ட்திருச்சி மாநாடு…!!திமுக வுக்கு கைகொடுக்குமா..?
CM கனவில்  ஸ்டாலின்..???
திருச்சி மலைக்கோட்டை போன்று திமுக வை தன்னுடைய கோட்டையாகவே வைத்திருக்கிறார்  திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை திருச்சியில் நடத்துவதற்கு நேருக்கு வாய்ப்பளித்திருக்கிறார் ஸ்டாலின். சென்டிமென்டாக திருச்சி என்றாலே அது திருப்பு முனையாக அமையும் என்பது திமுக வின் நம்பிக்கை. அதற்காக தான் திருச்சியில் இந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ளும்  மாநாடு நடைபெற்று வருகிறது..

இதற்கு முன்பு திருச்சியை அசைக்க முடியாத எ.ஃகு கோட்டையாக வைத்திருந்தவர்கள் அன்பில் பொய்யாமொழி அன்பில் தர்மலிங்கம் போன்றவர்கள் பட்டியலில் கே என் நேருவும் சேர்ந்து கொண்டார் என்றால் மறுப்பதற்கு இல்லை. இவர்கள் அரசியல் எல்லாம் கருணாநிதியிடம் எடுப்பட்டது. கலைஞர் இருக்கும் போது நேருவுக்கும் ஸ்டாலினுக்கு அவ்வளவு இணக்கம் இல்லாமல் சுனக்கமாகவே இருந்தது. அதனால் தான் திருச்சிக்கு தன் நம்பிக்கை நட்சத்திரம் தன்னுடைய இ;னனொரு மகன் என்று ஸ்டாலினால் கருதப்படும் அன்பில் மகேஷ் க்கு திருச்சியில் முக்கியத்துவம் கொடுத்தார் ஸ்டாலின்.
நேருவை திமுகவில் இருந்து அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கிவிட முடியாது என்பது ஸ்டாலினுக்கு தெரியும். இருந்தாலும் நேருவுக்கு பதவி உயர்வு கொடுத்து  நேரு கோட்டையை உடைத்துவிடலாம் என்பது தான் ஸ்டாலின் கணக்கு. அந்த கோட்டைக்கு மகேஷ்யை மகுடம் சூட்ட வைத்துவிடலாம் என்று கணக்கு போட்டு காய்நகர்த்தியிருக்கிறார் ஸ்டாலின்


இந்த நிலையில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிக்காக மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் வரவேற்புரை ஆற்றிய முதன்மைச் செயலாளர் கே.என் நேரு…
“ திமுக தேர்தலை பார்த்து பயப்படுகிறது என்று அதிமுக விமர்சனம் செய்து வந்தது. உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்கள் தேர்தல் ஆணையம் வரைக்கும் படியேறிய தலைவர் ஸ்டாலின்.அதனால் தான் உள்ளாட்சி தேர்தலில் இந்த அளவிறகு வெற்றி பெற முடிந்திருக்கிறது.


விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான் கிளை செயலாளராக துவங்கி தற்போது முதன்மைச் செயலாளராக பதவி அளித்து இருக்கிறீர்கள். உங்களது  வாழ்நாள் முழுவதும் நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டு இருப்பேன். உங்களை முதல்வராக்கியே தீருவோம்.
திருச்சியில் திமுக மாநாடு நடத்தும்பொதெல்லாம் வெற்றி தான். இப்போது திருச்சியில் மாநாடு நடத்த தலைவர் உத்தரவிட்டீர்கள். அடுத்த மாநாடு திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் மாநாடாகத் தான் இருக்கும் என்று உற்சாகமாக தன்னுடைய கன்னிப்பேச்சால் ஸ்டாலினை உற்சாகப்படுத்தியிருக்கிறார் நேரு.
T Balamurukan

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »