Press "Enter" to skip to content

மடியை நனைக்கும் நதியே…6 நிமிட வாசிப்பு“பச்ச உடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லு… பிள்ளைக்குத் தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு” என்று கிழக்குச…

காவேரி மருத்துவமனை

“பச்ச உடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லு… பிள்ளைக்குத் தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு” என்று கிழக்குச் சீமை படப் பாடலில் வரும் வரிகளை நாமெல்லாம் கடந்து போயிருப்போம். ஆனால் வாழ்க்கையில் தாய்மையை கடக்கும்போதுதான் இந்த வரிகளின் கனம் நமக்குப் புரியும்.

‘குழந்தை பிறந்திருக்கு’ என்று தகவல் சொன்னதுமே வாழ்த்துகள் என்று சொன்னால் அவர்கள் நமது சமூக தளத் தொடர்புகள். ’தாயும் சேயும் நலமா?’ என்று கேட்டால் உறவுகள். ’பத்திரமா பாத்துக்க. புள்ள அழுதுச்சா… பால் நல்லா சுரக்குதா’ என்றால் அவர்கள்தான் நமது நலம் விரும்பிகள்.

ஒரு புதிய குழந்தை என்பது ஒரு புதிய மகிழ்ச்சி, மற்றும் ஒரு அதிசயம். சுற்றியுள்ள எல்லோரும் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி விலைமதிப்பற்ற தருணங்களை அனுபவிக்கும் அதேநேரம் அந்தத் தாயும் புதியவள்தானே… தாய்மை அவளுக்குப் புதிதுதானே! அந்த சிசுவின் ஒவ்வொரு இருமல், ஒவ்வொரு தும்மல், ஒவ்வொரு அழுகையும் ஒரு புதிய தாயை பதற்றமடையவைக்கும். ஆனால், நினைவில் கொள்ளுங்கள், எல்லா புதிய விஷயங்களையும் போலவே, தாய்மைக்கும் ஒரு கற்றல் வரம்பு உள்ளது. மெல்ல மெல்ல தாய்மார்களே அதைக் கண்டுபிடித்துக் கொள்வார்கள்.

புதிதாகப் பிறந்த குழந்தைக்கும், பெற்றெடுத்த தாய்க்கும் 24/7 கண்காணிப்பு தேவைப்பட்டாலும், புதிய தாய் தனது குழந்தையின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் புரியாமல் கவலைப்பட வேண்டியதில்லை. சில நேரங்களில், அழுகை உணவு அல்லது ஆறுதலுக்காக.ஆனால், மற்ற நேரங்களில் அழுதால் என்ன என்பதுதான் தாய்மையின் தவிப்பு.

புதிய தாய்களுக்கான சில வழிகாட்டல்களை இப்போது நாம் பார்க்கலாம்.

*உங்கள் பிறந்த குழந்தை பிறந்த உடனேயே அவர்களின் தோல் மஞ்சள் நிறமாக மாறினால், அது மஞ்சள் காமாலை அறிகுறியாகும் மற்றும் பொதுவானது. இது பொதுவாக கல்லீரலால் செயலாக்கப்படும் பிலிரூபின் என்ற பொருளின் கட்டமைப்பால் ஏற்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தையின் கல்லீரல் பிலிரூபினைச் செயலாக்குவதற்கும் அதை வெளியேற்றுவதற்கும் இன்னும் முதிர்ச்சியடையாமல் இருக்கலாம்.

நீங்கள் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த சில வாரங்களுக்குப் பிறகும் தோலில் மஞ்சள் நிறம் மாறவில்லை என்றால், குழந்தையின் கல்லீரல் செயல்பாட்டை சோதிப்பதன் மூலம் இதை குணமாக்கலாம்.

*உங்கள் குழந்தை அடிக்கடி அழுகிறதா? பால் குடித்த பின்னாலும் அழுகிறதா? தொடர்ந்து அழுவது பெருங்குடலின் அடையாளமாக இருக்கலாம். அஜீரணம் மற்றும் வாயு காரணமாக குழந்தைகளுக்கு பெருங்குடல் வலி ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை பால் குடித்த பின் சில நிமிடங்களில் குழந்தைக்கு ஏப்பம் வருகிறதா என்று கவனியுங்கள். ஏப்பம் வந்தால் பாப்பா அழாது. ஏப்பம் வரவில்லையென்றால் ஜீரணித்ததில் பிரச்சினைதான் காரணம் என்பதை புரிந்துகொள்ளலாம்.

*உங்கள் குழந்தையின் வாயின் மேல் பகுதியில், கன்னங்களுக்குள், மற்றும் நாக்கில் வெள்ளை திட்டுகள் இருந்தால் அது ஒரு பாக்டீரியா தொற்றின் அறிகுறியாகும். குழந்தையின் வாய்க்குள் மெதுவாக சுத்தம் செய்ய ஈரமான துணியைப் பயன்படுத்துங்கள். இதில் தாய்க்கும் பங்கிருக்கிறது. ஒவ்வொருமுறை பாலூட்டி முடித்த பின்னும், பால் ஊட்டும் முன்னும் தாய்மார்கள் தங்கள் மார்புகளை தூய நீரால் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

குழந்தை என்பது நமக்குக் கிடைத்த பொக்கிஷம். அதை உரிய காலம் வரை பக்குவமாய் பார்த்துப் பார்த்து வளர்த்து இந்த சமூகத்து ஆரோக்கிய ஜீவனாக அளிக்கும் தாய்தான் குழந்தையின் முதல் பொக்கிஷம். இந்த இருவருமே குடும்பத்தின் பொக்கிஷங்கள். இவர்களைப் பார்த்துக் கொள்வதில்தான் நமது அக்கறையும் மருத்துவ மாண்பும் இருக்கிறது.

image

காவேரி மருத்துவமனை

காவேரி மருத்துவமனை தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்குமான பந்தத்தை பரிபூரணமாக்குகிறது. இங்கே நடக்கும் ஒவ்வொரு பிரசவமும், பிரசவத்துக்குப் பின்னான குழந்தையின் பொன்னாட்களின் கவனிப்பும் தாய்மைக்கு சற்றும் குறையாதவை. ஹாஸ்பிட்டாலிடி என்றால் பரிவு, கனிவு என்று பொருள் சொல்லுவார்கள். காவேரி என்றாலே அன்பும், அக்கறையும், பரிவும், கனிவும், கவனிப்பும். காவேரி ஹாஸ்பிடல் என்றால் இவை எல்லாமே இரட்டிப்புதான்.

தொடர்பு கொள்ள: +91-431-4022555 / 4077777

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »