திருப்பதி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏழுமலையான் கோயில் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக ஐந்தரை ஏக்கர் நிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
Source: Dinakaran