Press "Enter" to skip to content

மொத்தம் 182 பெண்கள்.. முதலில் பேச்சு.. பிறகு பெட்ரூம்.. இரண்டே பேர்தான்.. அதிர்ச்சிகான காவல் துறை!

கொல்கத்தா: மொத்தம் 182 பெண்கள்.. முதலில் நைஸாக பேச்சு.. பிறகுதான் பெட்ரூம் அட்டூழியம்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவோம் என்று மிரட்டியே 182 பெண்களிடம் பணம் பறித்திருக்கிறார்கள்.. இந்த காரியத்தை செய்தது ஒரு கும்பல் இல்லை.. ரெண்டே பேர்தான்!

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அனீஷ் லோஹரூகா.. இவர் ஒரு பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தை சேர்ந்தவர் அதேபோல, பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தை நடத்தி வருபவர் ஆதித்ய அகர்வால்.. இருவருமே பிசினஸ்மேன்கள்.. இருவருமே பிரபலமானவர்கள். ஆனால் இவர்கள்தான் இந்த கேவலத்தை செய்துள்ளனர்.

பெண்களிடம் நெருக்கமாக பழகி.. அதை வீடியோ எடுத்து வைத்துமிரட்டி பணம் பறித்துள்ளனர்.. இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்தே இவர்களுக்கு இதுதான் பொழப்பாக இருந்து வந்துள்ளது.. முதலில் ஒரு பெண்ணை பார்த்ததும் ஹலோ சொல்லி நட்பாக பழகுவார்களாம்.. அப்படியே குளோசாக பேச ஆரம்பித்து.. பெட்ரூம்வரை அந்த பெண்ணை அழைத்து கொண்டு வந்துவிடுவார்களாம்.

அப்போது ஜாலியாக இருப்பதை போட்டோ, வீடியோவாக எடுத்து வைத்து கொள்வார்கள்.. இறுதியில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம், வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இப்படியே 182 பெண்களாம்.. அத்தனையும் அந்தந்த பெண்களின் அந்தரங்க வீடியோக்கள்தான்.

இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த நவம்பர் மாதம் கொல்கத்தா போலீசாரிடம் புகார் தரவும்தான் விஷயம் வெடித்து வெளியே வந்தது… அதன்பேரில்தான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவர்களுக்கு உடந்தையாக கைலாஷ் யாதவ் என்பவரும் இருந்திருக்கிறார்.. அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இப்போது பிசினஸ்மேன்கள், அனீஷ் லோஹரூகா, ஆதித்ய அகர்வால் போலீசாரின் பிடியில் உள்ளனர்.. இவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப்பையும் கைப்பற்றி உள்ளனர்.. நம்ம ஊர் பொள்ளாச்சி ஷாக்கையே மிஞ்சும் இந்த சம்பவம் கொல்கத்தாவில் பரபரப்பை தந்துள்ளது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »