அரூர்: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மோட்டாங்குறிச்சி, நத்தமேடு, டி,அய்யம்பட்டி, பொம்மிடி, திப்பம்பட்டி, தண்டா உள்பட பல பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோழிக் கொண்டை பூ சாகுபடி செய்துள்ளனர். தற்போது சீசன் இல்லாததால் ஒரு கிலோ கோழிக் கொண்டை பூ ரூ25க்கு விற்பனை செய்யப்படுகிறது. விழா காலத்தில் விலை அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இப்பகுதியில் கோழி கொண்டை, அரளி, சாமந்தி, பட்டன் ரோஸ் உள்ளிட்ட அனைத்து வகை மலர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கிருந்து பெங்களூர், சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
Source: Dinakaran