Press "Enter" to skip to content

காங்கிரஸ் கட்சி மாயாஜாலத்தை எதிர்பாக்கவில்லை!! ஆம்ஆத்மி யை சீண்டிய குஷ்பு..!!

 BY: T.Balamurukan
 டெல்லிசட்டமன்றத்தேர்தல்முடிவுகளில்ஆம்ஆத்மிபெருவாரியானஇடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றிஇருக்கிறது.ஆனால்காங்கிரஸ்கட்சிதொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்துள்ளது. இது கட்சித் தொண்டர்களை பெரிதும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தனதுகருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில், காங்கிரஸ் கட்சி எந்த மாயாஜாலத்தையும் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் மீண்டும் அழிக்கப்பட்டுள்ளது. . நாம் போதுமானதைச் செய்கிறோமா? நாம் சரியானதைச் செய்கிறோமா? நாம் சரியான பாதையில் இருக்கிறோமா? என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். நாம் இப்போதே பணியைத் தொடங்க வேண்டும். இப்போது இல்லையென்றால் எப்போதும் முடியாது. அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டும். மக்கள் வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடி மற்றும் அமித்ஷா அராஜகக் கும்பலை விரட்டியிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.

எல்லா தோல்விகளுக்குப் பிறகும் செய்வதை போல நடந்ததை மறுபார்வை பார்க்க இப்போது நமக்கு நேரம் இல்லை. ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் நாம் அப்படி செய்வதில்லை. “நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறி விடு” என்ற மகாத்மாவின் வார்த்தைகளை எடுத்துக் கொண்டு நாம் செயல்பட வேண்டும். நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »