Press "Enter" to skip to content

டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்

தலைநகர் டெல்லியின் முதல் மந்திரியாக மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்றார்.

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 16-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் முதல் மந்திரி பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. காலை 10 மணியளவில் நடைபெற்ற விழாவில் கெஜ்ரிவால் டெல்லி முதல்-மந்திரியாக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்றார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 6 மந்திரிகள் பதவியேற்றனர்.

இந்த விழாவில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்கள் முதல் டாக்டர்கள் வரை என்று டெல்லியின் கட்டமைப்புக்கு உதவி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த தனிநபர்கள் 50 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »