மாதவரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் போராடி வருகின்றன.
சென்னை:
மாதவரம் ரவுண்டானா அருகிலுள்ள எண்ணெய் கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் அதிகளவில் கரும்புகை வெளியேறி வருகிறது. கரும்புகையால் கண் எரிச்சல் ஏற்படுவதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைக்க ஏதுவாக 20 மெட்ரோ தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வண்டிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar