Press "Enter" to skip to content

இத்தாலி: 29 பேர் பலி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) – அதிரவைக்கும் கொரோனா

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மேலும், 29 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

ரோம்:

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதிலும் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. 

வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயித்து 835 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, இத்தாலி, ஈராக் உள்ளிட்ட 50-க்கும் அதிமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »