Press "Enter" to skip to content

ஒடிசா கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கல சுறா- சிறிது நேரத்தில் உயிரிழந்த பரிதாபம்

ஒடிசா கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கல சுறா மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது.

சோனாப்பூர்:

ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் மாவட்டம், சோனாப்பூரில் உள்ள கடற்கரையில் நேற்று காலை மிகப்பெரிய திமிங்கல சுறா கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கும்போது அது உயிருடன் இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள், சுறாவை கடலுக்குள் அனுப்ப முயற்சி செய்தனர். 

ஆனால் அந்த சுறாவால் மீண்டும் கடலுக்குள் செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் கரையிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. 

திமிங்கல சுறா ஒதுங்கியது பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடற்கரைக்கு வந்து சுறாவை பார்த்து சென்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »