Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு இந்தியாவில் மேலும் ஒருவர் பலி

மகராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

மும்பை:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. 

உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 324 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்துவருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 63 வயது நிரம்பிய நபர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்மாநில பொதுச்சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. 

இதனால் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »