Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு இந்தியாவில் மேலும் ஒரு பலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜெய்ப்பூர்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. 

இந்த வைரஸ் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 7 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 670 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »