Press "Enter" to skip to content

கொரோனா: 10 லட்சத்தை கடந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

ஜெனிவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 168 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51 ஆயிரத்து 354 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெற்று வருபவர்களில் 37 ஆயிரத்து 3 பேரின் நிலைமை மிகவும் கவலைகிடமாக உள்ளது. 

மேலும்,  கொரோனா பரவியவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 191 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »