Press "Enter" to skip to content

தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 102 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதற்கிடையே, டெல்லியில் இருந்து வந்தவர்களில் நேற்று 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »