Press "Enter" to skip to content

58 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – அதிரும் நாடுகள் … கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஜெனிவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ளது. 

கொரோனாவின் தாக்குதல் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதுவரை அந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 10 லட்சத்து 83 ஆயிரத்து 564 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 58 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.  

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 677 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 39 ஆயிரத்து 252 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 738 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 6,803

இத்தாலி – 14,681

ஸ்பெயின் – 10,935

ஜெர்மனி – 1,234

சீனா – 3,322

பிரான்ஸ் – 6,507

ஈரான் – 3,294

இங்கிலாந்து – 3,605

துருக்கி – 425

சுவிஸ்சர்லாந்து – 591

பெல்ஜியம் – 1,143

நெதர்லாந்து – 1,487

கனடா – 178

ஆஸ்திரியா – 168

தென்கொரியா – 174

போர்ச்சீகல் – 246

பிரேசில் – 343

ஸ்வீடன் – 358

அயர்லாந்து – 12

டென்மார்க் – 139

ஈக்வடார் – 145

ரூமேனியா – 133

பிலிப்பைன்ஸ் – 136

இந்தோனேசியா – 181

அல்ஜீரியா – 105

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »