Press "Enter" to skip to content

73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஜெனிவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 13 லட்சத்து 29 ஆயிரத்து 305 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 9 லட்சத்து 78 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சிகிச்சை பெறுபவர்களில் 46 ஆயிரத்து 538 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 327 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 73 ஆயிரத்து 831 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 10,490

ஸ்பெயின் – 13,169

இத்தாலி – 16,523

ஜெர்மனி – 1,662

பிரான்ஸ் – 8,911

சீனா – 3,331

ஈரான் – 3,799

இங்கிலாந்து – 5,373

துருக்கி – 649

சுவிஸ்சர்லாந்து – 762

பெல்ஜியம் – 1,632

நெதர்லாந்து – 1,867

பிரேசில் – 506

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »