இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
ரோம்:
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 39 லட்சத்து 67 ஆயிரத்து 806 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 லட்சத்து 26 ஆயிரத்து 938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 905 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 13 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 73 ஆயிரத்து 534 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக இத்தாலியில் வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இந்நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 185 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 87 ஆயிரத்து 961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 99 ஆயிரத்து 23 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு மேலும் புதிதாக 243 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் அமெரிக்கா (77,559 பேர்), இங்கிலாந்து (31,241 பேர்) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி (30,201 பேர்) மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar