தலைநகர் டெல்லியில் மேலும் 338 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதால், அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6318 ஆக அதிகரித்துள்ளது.
பரிசோதனை செய்யும் ஊழியர்
தலைநகர் டெல்லியில் மேலும் 338 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதால், அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6318 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 338 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6318 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உள்ளது என டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar