Press "Enter" to skip to content

ரூ. 200 கோடிக்கு குறைவாக சர்வதேச ஒப்பந்தம்கள் இனி வெளியிடப்படாது – நிர்மலா சீதாராமன்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.200 கோடிக்கு குறைவாக சர்வதேச டெண்டர்கள் இனி வெளியிடப்படாது என நிதி மந்திரி தெரிவிதுள்ளார்.

புதுடெல்லி: 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். 

அவர் கூறுகையில்:-

200 கோடி ரூபாய்க்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது. இந்த டெண்டர்கள் அனைத்தும் இந்திய சிறு, குறு நிறுவனங்களுக்கே வழங்கப்படும்.

அதன் மூலம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். 

இவை தன்னிறைவு இந்தியாவை உருவாக்கும். மேலும், இவை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்தும்

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »