ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 10 நாளில் ஒரு லட்சத்தையும் தாண்டியுள்ளது.
மாஸ்கோ:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 43.90 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,95,696 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்யா நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது அங்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 10,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 11வது நாளாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,42,271 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 2,212 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு கொரோனா தொற்றில் இருந்து 48,003 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன.
Related Tags :
Source: Maalaimalar